IMG 20220319 WA0019 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

செல்வம் முட்டாள்! – கஜேந்திரன் பதிலடி

Share

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இப்போது முட்டாள்தனமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் இன்று நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சி அரசுக்கு முண்டு கொடுத்து ஐ.நாவில் இலங்கை அரசைக் காப்பாற்றியதன் மூலமே ராஜபக்ச அரசானது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுத்து
காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முற்படுகின்றது.

நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன் நேற்று ஓர் அறிக்கை விட்டிருக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசின் ஒரு இலட்சம் ரூபா நட்டஈட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இப்படி முட்டாள்தனமான கருத்தை இப்போது செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்க முடியாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...