mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மஹிந்த யாழ். விஜயம்! – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

இதன்போது யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் அவர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும் அவர் தரிசிக்கவுள்ளார்.

இதேவேளை, தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்திப் பாலத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிரதமரால் திறந்துவைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையத்தையும், வர்த்தகத் தொகுதிகளையும் திறந்துவைக்கவுள்ளார்.

மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையத் தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...