WhatsApp Image 2022 03 17 at 8.37.13 PM
இலங்கைசெய்திகள்

வீதியில் திருத்தகம் – தாம் எந்தப்பாதையால் செல்வது!!

Share

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து இவை பழுதுபார்க்கப்படுவதால் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.

இதற்கு அருகில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ,சண்டிலிப்பாய் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்துள்ளது. இப்பாட சாலை மாணவர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் அன்றாடம் இவ்வீதியினை பயன்படுத்திவருகிறார்கள்.

இவ்வீதியானது ஒடுங்கிய அகலம் குறைந்த வீதியாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தினை மக்கள் எதிர் நோக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்றி பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...