ஹரின் பெர்னாண்டோ
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்குச் சஜித் அணி ஒரு மாதம் காலக்கெடு!

Share

“நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும். அவ்வாறு இல்லையேல் எமது போராட்டம் தீவிரமடையும். ஜனநாயக வழியில் அரசை விரட்டியடிப்போம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசுக்கு எதிராக மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடுவை வழங்குவதற்கான அறிவித்தலை விடுக்கவே நாம் கொழும்பு வருகின்றோம்.

அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வு இல்லையேல் எமது போராட்டம் வலுக்கும்.

கொழும்பு வருவதற்கு பஸ் இல்லாவிட்டால் மக்கள் நடந்தாவது வருவார்கள். எனவே, எமது போராட்டத்தைத் தடுக்க முற்படவேண்டாம். நிச்சயம் எமது பலத்தைக் காட்டுவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...