இலங்கை அமெரிக்கா
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேசுங்கள்! – இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை

Share

இலங்கையில் நின்று, நிலைத்து நீடிக்க கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

”சகலரையும் ஒன்றிணைத்து, நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக நிறுவனங்களுடனும் ஈடுபட்டு செயற்படுமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம்”

– என்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் முக்கியமான பல மனித உரிமைகள் வழக்குகள் பின்னடைவு கண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, மிக முக்கியமான மனித உரிமை மீறல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள், பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் இந்த உரையில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிவில் சமூக தரப்புகள் கடும் கண்காணிப்புக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்தும், சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...