625.500.560.350.160.300.053.800.900.160.90 24
செய்திகள்இலங்கை

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்தோரே வெளியேற்றம்! – ஜோன்ஸ்டன்

Share

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் முற்பட்டனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தினர். அவர்களிடம் திட்டமிடல் இருக்கவில்லை. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்திலேயே செயற்பட்டனர். அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகளை வழங்கியும், அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்பட்டனர்.

எனவேதான் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அன்று மங்கள செய்ததைபோன்றே இவர்கள் தற்போது செய்ய முற்பட்டனர். அன்று மங்களவை மஹிந்த வெளியேற்றினார். இன்று ஜனாதிபதி கோட்டாபய இவர்களை வெளியேற்றினார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளையில் பெரும் அதிர்ச்சி: பாரியளவு ஹெராயினுடன் முக்கிய சந்தேக நபர் கைது!

புத்தள பகுதியில் சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மிகப்பெரிய கையிருப்புடன் தொடர்புடைய முக்கிய சந்தேக...

world 91
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!

ஹொரானா, மல்வனேகம பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக 46 வயதுடைய நபர்...

world 88
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்சாரக் கட்டணத்தில் நிலக்கரிச் சூழல் செலவுகளைச் சேர்க்கத் தடை: பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிரடி!

மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்கும்போது, நிலக்கரிச் சூழலால் (Coal conditions) ஏற்படும் மேலதிக செலவுகளை நுகர்வோர் கட்டணத்தில்...

world 87
உலகம்செய்திகள்

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அதிரடி மாற்றம்!

பாப் இசையின் மன்னர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மைக்கேல்’ (Michael) திரைப்படம்,...