bycicle e1643201032906
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு சைக்கிள் வழங்க தீர்மானித்தது அரசு!!

Share

அரச ஊழியர்கள் மத்தியில் சைக்கிள் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது இயங்கு நிலையிலுள்ள வாகனங்கள் 05 மில்லியன்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், அது 2000 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது.

வருமானம் அதிகரிப்பு மற்றும் நிலவுகின்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்களாலும் தனியார் மோட்டார் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.

தனியார் மோட்டார் வாகனப் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளமை, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளின் பங்களிப்பு குறைவடைந்தமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வளிமண்டலம் மாசடைவது குறைக்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம், வளியின் தரம், சுற்றடல், காலநிலை மாற்றங்கள் மற்றும் தனிநபர் நிதிநிலைமை போன்ற விடயங்களில் நேர்மய விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியான நன்மைகளை அடைவதற்காக, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை நிலவுகின்ற போக்குவரத்துக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது பொருத்தமாக அமையுமென கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக தற்போதுள்ள வீதிகளுக்குப் பொருத்தமான வகையில் சைக்கிள் பாதையை புள்ளடியிட்டு வேறாக்குதல் மற்றும் பாதசாரிகளுக்காக தற்போதுள்ள நடைபாதைகளை மேம்படுத்தல்.

எதிர்வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படும் வீதிகளுக்கு சைக்கிள் மற்றும் நடைபாதைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

அரச அலுவலகர்களுக்க சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

அலுவலகங்களில் சைக்கிள் பாவனையாளர்களுக்கு அவற்றைத் தரித்து வைப்பதற்கான இடங்கள் மற்றும் அவற்றின் அணுகலக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல். என்பவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNEws

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...