இலங்கைசெய்திகள்

கொரோனா அறிகுறிகளுடன் பாராளுமன்றம் வந்த ஊழியர் – பிறகு நடந்தது!!

Share

காய்ச்சல், தடிமல் உள்ளிட்ட கொவிட் 19 அறிகுறிகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொவிட் 19 அறிகுறிகள் தொடர்பில் அறிந்தும் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சமீபத்தில் முகம் சிவந்து பல்வேறு அறிகுறிகளுடன் இருந்துள்ளார்.

இதை அவதானித்த மற்ற ஊழியர் ஒருவர் உங்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் உடனடியாக சென்று கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

எனினும் அவர் அதை அலட்சியப்படுத்தியதுடன் ஏனைய ஊழியர்களை அவ்வப்போது வலுக்கட்டாயமாக கட்டித் தழுவியதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரிகளுக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அவ்வறிக்கையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவரைக் கட்டிப்பிடித்த ஊழியர் உட்பட, திணைக்களத்தில் இருந்த  ஐந்து ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று இருந்தமையும் பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த ஊழியரின் பொறுப்பற்ற நடத்தையால் அப்பிரிவு ஊழியர்களிடையே கொவிட் பரவியிருக்கலாம் என பாராளுமன்ற அதிகாரிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்றத்தில் கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து வரும் இவ்வேளையில் சில ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவது பிரச்சினைக்குரிய விடயம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரது குடும்பத்தினரும் காய்ச்சலுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்த ஊழியர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

கொவிட் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் அவர் வீட்டுக்குச் சென்ற பிறகும் காய்கறி வாங்க பொதுச் சந்தைக்குச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...