இலங்கை
எதிர்வரும் நீண்ட விடுமுறை ஆபத்தானது – எச்சரிக்கும் சுகாதாரப் பிரிவு!!
வரவிருக்கும் வார இறுதி நாள் கொண்ட நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்கு செல்லும் போது தொடர்ந்தும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர்கள் ஹேமந்த் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் covid-19 சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வார இறுதி நீண்ட நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பலர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
அவ்வாறு பயணங்களை மேற்கொள்பவர்கள் நெரிசல் குறைவான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டில் சுமார் 15 மில்லியன் மக்கள் covid-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றிருந்தாலும் பலர் இன்னும் பூஸ்டர் டோசை பெறவில்லை.என்றார்.
You must be logged in to post a comment Login