5760
செய்திகள்உலகம்

சீனா ஒலிம்பிக்கில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம்!!

Share

சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதவேளை தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகின்றமையால், இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது.

ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் .

சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...