canada 1
செய்திகள்உலகம்

பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! – விசாரணைகள் தீவிரம்

Share

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் ‘கலாசார இனப்படுகொலை’ வரலாற்றை பறைசாற்றும் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90 இற்கும் மேற்பட்ட ‘சாத்தியமான’ கல்லறைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் உறைவிடப் பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சுமார் 800 பழங்குடி மக்களைக் கொண்ட வில்லியம்ஸ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன், செயின்ட் ஜோசப் மிஷன் ரெசிடென்ஷியல் பாடசாலையில் புவி இயற்பியல் தேடலின் முதற்கட்டமாக ‘மனித கல்லறைகளின்’ குணாதிசயங்களைக் கொண்ட 93 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 4,000 முதல் 6,000 குழந்தைகள் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், முன்னாள் உறைவிடப் பாடசாலை குறித்து கனடா முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பழங்குடியின குழந்தைகள் 1800 ஆம் ஆண்டிற்குப் பின்னர், குறிப்பாக 1990 ஆண்டு வரை கனடா முழுவதும் 139 குடியிருப்புப் பாடசாலையில்இ தங்கள் குடும்பங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனிமைப்பட்டுத்தப்பட்டவர்கள் தாய்மொழிகளை விட்டு வெளியேறி, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி பேசும் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம் இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....