download 4
செய்திகள்இலங்கை

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

Share

ஊரடங்கை மீறிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி பணிப்பு!!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் சிறப்புச் சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், இதுவரை கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்ரெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச செயலாளர், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமப்புற கொரோனாக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் என்பவை இணைந்து தடுப்பூசி ஏற்றாதவர்களை அடையாளம் கண்டு, தடுப்பூசிக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

1906 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணிக்கு அழைப்பதன் மூலமும் தடுப்பூசி பற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்ய முடியும்.

இந்தத் தடுப்பூசித் திட்டத்தை இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின் படி மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...