Djokovic
விளையாட்டுசெய்திகள்

ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தது அவுஸ்திரேலியா!-

Share

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில், கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்தனர்.

இந்தநிலையில், அவுஸ்திரேலிய ஒபனில் பங்குபெற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

ஆனால், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனது தனிப்பட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 9
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில்...

13 8
செய்திகள்இந்தியா

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை முன்னாள்...

12 9
இலங்கைஅரசியல்செய்திகள்

யோஷித ராஜபக்சவுக்குப் பிணை: வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச மீதான பணமோசடி தொடர்பான வழக்கு,...

11 9
செய்திகள்உலகம்

ஈரான் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி: டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புட்டின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை

மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து,...