Dinesh Gunawardena
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ்க்கட்சிகளின் வரைபில் தமிழீழம் – கண்டுபிடித்தார் குணவர்த்தன!!

Share

இந்திய பிரதமருக்கான ஆவணத்தை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மட்டும் கையொப்பமிட்டு அனுப்புமாக இருந்தால் அது விடுதலை புலிகளின் கனவான தமிழீழத்திற்கான வரைபாகவே இருக்குமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற கட்சிகளுக்கு இடையில் – பொதுவான இணக்கப்பாடு , ஒற்றுமை இல்லை. இந்திய பிரதமருக்கு என தயார் செய்யப்பட்ட பொது ஆவண விடயம் இதனை வெளிக்காட்டுகின்றது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இங்குள்ளவர்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வினை வழங்க முன்வராது.

எமது நாட்டின் உள் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு எந்தவொரு வெளிநாடுகளுக்கும் அனுமதி இல்லை. நாட்டின் அரசுதான் இங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என்பதை தமிழ்த்தலைமைகள் விளங்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களது அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சி தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தினை நாடுவதுதான் விசித்திரமாக உள்ளது.என்றார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு அனுப்புவதெற்கென தயார் செய்யப்பட்ட வரைபில் வடக்கு கிழக்கு தமிழ்க்கட்சிகளின் தலைமைகளே கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...