Gold Sudan
உலகம்செய்திகள்

இடிந்து விழுந்தது தங்கச் சுரங்கம்- 38 பேர் பலி

Share

தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள எல் நுஹுத் நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இதேவேளை இடிந்து விழுந்த தங்கச் சுரங்கமானது செயல்படாத நிலையில் இருந்த நிலையில், சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.

இறந்தவர்களைத் தவிர குறைந்தது 08 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...