செய்திகள்
மக்கள் நாட்டின் சேவைகளை வீணாக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!
நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு அலகிற்கான உண்மையான விலையை அரசு அறவிட்டால் பொதுமக்கள் சிக்கனமாக நீர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.
அத்தோடு நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் என வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
You must be logged in to post a comment Login