21 605d54e7af98f
செய்திகள்அரசியல்இலங்கை

தப்பியோடுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர்!

Share

“பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோட மாட்டார்கள்” என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பசில் ராஜபக்சவுக்கு எதிராக இதற்கு முன்னரும் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறைகூறுவதற்கு ஒன்றுமில்லாததால் தான் எதிரணிகள் பசில் விவகாரத்தை கையிலெடுத்துள்ளன. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு.

பசில் ராஜபக்ச சிறப்பாக செயற்படக்கூடியவர். அவரும் மனிதர் தான். தனிப்பட்ட தேவைகள் இருக்கலாம். அதற்காக சென்றிருக்கலாம். மீண்டும் வருவார். தப்பியோடுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர் எனவும் சசீந்திர ராஜபக்ச குறிப்பிட்டார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...