யமுனானந்தா
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொற்றுகள்!

Share

தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உண்ணி காய்ச்சல் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளித்து பாதுகாக்கலாம். வயல் தோட்டங்களில் மழைக்கு பின்னர் தொற்றும் நோயாக உண்ணி காய்ச்சல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகமாக காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமே அதனை தடுக்கலாம் என தெரிவித்தார்.

அத்தோடு பல வருடங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள ஒருவரிடம் மலேரியா காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதால் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயமும் இலங்கையில் காணப்படுகின்றது.

ஆகவே, யாழ்ப்பாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...