sinanolipaatha malai
செய்திகள்இலங்கை

சுகாதார வழிகாட்டல்களுடன் சிவனொளிபாத மலை தரிசனம்!

Share

சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பக்தர்கள் புதிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால பூரணை தினமான இன்று 2022 ஆம் ஆண்டுக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 மே மாதம் 16 ஆம் திகதியுடன் பருவகாலம் நிறைவுப் பெறும் வரை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கேற்ப,

தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் பிரதியை உடன் வைத்திருக்க வேண்டும், தற்காலிக விடுதிகளை ஏற்பாடு செய்யவோ பராமரிக்கவோ கூடாது, சிவனொளிபாதமலை சுற்றுவட்டாரத்தில் யாசகம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு முகக் கவசம் அணிதலும், சமூக இடைவெளியை பேணுதலும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...