North korea
உலகம்செய்திகள்

10 நாட்களுக்கு எவரும் சிரிக்கக் கூடாது: அரசின் அதிரடி உத்தரவு

Share

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிரிக்கத் தடை விதிக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த 10 நாட்களுக்கு வட கொரிய மக்கள் சிரிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, மற்றும் பிறந்தநாள் விழாக்கள், ஏனைய விழாக்களைக் கொண்டாடக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பத்து நாட்களில் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிம் ஜோங் இல்லின் மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வடகொரியாவில் இம்முறையானது கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...