சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தப்லிகி ஜமாத் அமைப்பை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் , தப்லிகி ஜமாத் அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த அமைப்பு இந்தியா, பாகிஸதான், வங்காளம் போன்ற நாடுகள் உட்பட 150 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது.
இதனால் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .
Leave a comment