drgf
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

நாளை வலி.வடக்கில் 30 ஏக்கர் காணி சுவீகரிப்பு – அணி திரளுமாறு சஜீவன் அழைப்பு!!!

Share

வலிவடக்கு பிரதேசத்தின் நகுலேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர்கள் பிரவில் உள்ள 30க்கும் அதிகமானோரின் 25க்கும் அதிக ஏக்கர் காணி இலங்கை அரச படைகளின் தேவைகளுக்காக நாளைய தினம் சுவீகரிக்கப்படவிருக்கிறது.

காங்கேசன்துறை மேற்கு பிரதேசத்தில் மட்டும் 26 பேருக்கு சொந்தமான 19 ஏக்கருக்கும் அதிக காணி அளவிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினரும் சமூக செயற்பட்டாளருமாகிய சஜீவன் கருத்து வெளியிடுகையில் , பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்டபடி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக அரச இயந்திரத்தின் பூரண ஆதரவுடன் வடக்கின் பெறுமதியான காங்கேசன்துறை துறைமுகமும் அதனுடன் இணைந்த கீரிமலை புனித பூமி பகுதியில் உள்ள காணிகளும் நாளைய தினம் அளவிடப்பட விருக்கிறது.

எனவே காணி உரிமையாளர்கள் , தமிழ்த்தேசிய பற்றாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த அளவீட்டு நடவடிக்கையை முறியடிக்க ஒன்றிணையுமாறு பகீரங்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...