h
செய்திகள்உலகம்

விடாமல் தாக்கிய நான்கு சூறாவளிகள் – ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவு

Share

அமெரிக்காவில் விடாமல் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் 50 பேர் சாவடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு சூறாவளிக் காற்று அம்மாகாணத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

இதன் காரணமாக பல கட்டிடங்களும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இச்சூறாவளியில் சிக்கி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவடைந்திருக்கலாமென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்றால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாவடைந்தோரின் எண்ணிக்கை 100 ரை தாண்டலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.

கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சூறாவளி இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேபீல்டு நகரத்தில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக இந்த உயிர் சேதம் ஏற்பட்டு விட்டதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை போல இல்லினாய்சில் ஒரு பெரிய அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் சேத நிலவரம் குறித்த தகவல் எதுக்கும் தெரியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...