20211209 114614 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்புக்கு துணைபோகும் மக்கள் பிரதிநிதிகள்!

Share

மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தின் பின்னரும் மக்களிடம் உறுதிப்பத்திரங்களை மிரட்டி சுவீகரித்துக் கொள்கின்றனர்.

பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் இதற்கு தொடர்ச்சியாக கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இச்சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. இது எமக்கான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

காணி சுவீகரிப்பு சார்ந்த விடயங்கள் நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தளங்களிலும் பேசுபொருள் ஆக்கப்படாமை படையினருக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளதாக மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் மேலும் தெரிவித்தார்.

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் கரையோர மக்களின் காணிகளை கடற்படையினரும் இராணுவத்தினரும் ஆக்கிரமிப்பதற்கு அரச அதிகாரிகள் துணை போவதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இரட்ணசிங்கம் முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...