WhatsApp Image 2021 12 08 at 6.51.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் கொலைச்சம்பவம் போல் இலங்கையிலும் நடந்துள்ளது – சாணக்கியன்!!

Share

பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில் கூட இடம்பெற்றுள்ளன. – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோழர் பிரியந்தகுமாரவின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை இலங்கையிலுள்ள இளைஞர்கள் கண்டிக்கின்றனர். அனுதாபம் தெரிவிக்கின்றனர். இலங்கையிலும் இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

56,58 காலப்பகுதியில் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீதுதாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கறுப்பு ஜுலையின்போதும் தமிழ் இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவை தொடர்பான படங்களும் உள்ளன.  – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...