BIDEN PUTIN
செய்திகள்உலகம்

பேச்சுவார்த்தையில் பைடனுக்கும் புட்டினுக்கும்…

Share

ஜோ பைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாளை மறுதினம் இணையத்தளத்தினூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்றை ரஷ்யா மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னதாக அமெரிக்க இராஜங்க செயலாளர் அந்தனி பிளிங்கன் தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான இறுதி தீர்மானத்தை விளாடிமீர் புட்டின் மேற்கொண்டுள்ளாரா? என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் தமது படையணியினரை பலப்படுத்தி வருவதாகவும் தாம் போருக்கு ஆயுத்தமாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா 94,000 துருப்பினர் உக்ரைனுடனான எல்லை பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, இராணுவ கனரக வாகனங்கள் மற்றும் மின்னணு போர் முறைமை தொகுதிகளை அனுப்பியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை மறுதினம் இணையத்தளத்தினூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...