வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களை வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும் சிறந்த காற்றோட்டத்தைப் பெறுவதனால் மாத்திரமே விரைவில் குணமடைவார்கள் என வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ கூறினார்.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்நிலைமைகளுக்கு மேலதிகமாக கடுமையான நோய் நிலைமை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a comment