ISIS
செய்திகள்உலகம்

ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Share

ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நீதிமன்றம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சிறுபான்மை சமய குழுவைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்றை படுகொலை செய்ததால்ம்,அது முழுதான இனப்படுகொலை என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கொல்லப்பட்ட குழந்தையின் தாயாருக்கு 57,000 அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழு இனப்படுகொலைகளில் ஈடுபட்டமை சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

இது தவிர, தாங்க முடியாத பாலியல் வன்முறைக்கு பல பெண்கள் உட்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...

03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...