20210815 003230
செய்திகள்இலங்கை

கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!!

Share

கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!!

கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும் அறிகுறியாகவே கொள்ளப்படும் என பொது வைத்திய நிபுணர் கஜந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் டெல்டா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர் இதுவரை யாழ்ப்பாணத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.

ஒரு வாரத்தில் ஒரு கொரோனா மரணம் ஏற்பட்ட யாழ்ப்பாணத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா மரணம் ஏற்பட்டு வருகின்றது.

இரண்டு, மூன்று நாள்களுக்கு மேல் அதிகமாக காய்ச்சல் காணப்படல், நீர் அருந்த கஷ்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது.

தடுப்பூசி போட்டால் கொரோனா பரவாது என்பது இல்லை. ஆனால் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் தீவிரமாக கொரோனா பரவுகின்ற சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...