download 8
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு செல்வோருக்கு கொவிட் சோதனை அவசியம்!

Share

ஐக்கிய அரபு செல்வோருக்கு கொவிட் சோதனை அவசியம்!

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பரிசோதனைக்காக பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்துக்கு வருகைதர வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய, அங்கு செல்லும் அனைவரும் கொரோனாப் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் பணியாளர்களுக்கு, கொரோனாப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை விமான நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...