Boundaries between Singapore and Malaysia
செய்திகள்உலகம்

மீண்டும் திறக்கப்பட்டுள்ள எல்லைகள்

Share

மீண்டும் சிங்கப்பூர்க்கும் மலேஷியாக்கும் இடையேயான எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் – மலேசியாவுக்கும் இடையிலான எல்லை, முறையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு காரணமாக சிங்கப்பூர் – மலேசியா எல்லைகள் 2020 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் மூடப்பட்டன.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நாள்தோறும் சுமார் 300,000 மேற்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்வதுடன், இவ் எல்லையானது உலகின் பரபரப்பான எல்லைப் பகுதியாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லையை மீண்டும் திறக்கும் நிகழ்வை சம்பரதாய பூர்வமாக அறிவிக்கும் வகையில் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், சிங்கப்பூர் சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ், 1,440 பயணிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை, குடியுரிமை, வதிவிட விசா அல்லது நீண்ட காலம் தங்கியிருக்கும் விசாக்களை கொண்டவர்கள் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரொன் வைரஸ் பரவும் இந்நிலையில் இவ் எல்லைகளை திறப்பது அபாயமானதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...