செய்திகள்
கனடாவில் பரவிவரும் ஒமைக்ரோன் வைரஸ்!!
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல நாடுகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
பல நாடுகளும் இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லைகளை மூடி வருகின்றன. பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களிடம் ஒமிக்ரோன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி ஆகியவையும் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளவா்களுக்கு அந்த வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இதுவரை ஒமைக்ரோன் வகை கொரோனா கனடா நாட்டில் 2 பேருக்கு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில், ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன.
You must be logged in to post a comment Login