IMG 20210814 WA0021
செய்திகள்இலங்கை

செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

Share

செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.

IMG 20210814 WA0022

தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள அலுவலகத்துக்கு முன்பாக அதன் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நினைவேந்தலை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

IMG 20210814 WA0020

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலுதவி மருத்துவ பயிற்சிக்காக பாடசாலை மாணவிகள் தங்கியிருந்த போது கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உள்ளிட்ட 60க்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...