Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கும்! – கிழக்கு ஆளுநர்

Share

திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு ஆளுநர் கிண்ணியா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

அங்கு விபத்து தொடர்பில் தெரிவிக்கையில்,

விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ள அனைத்து பாலங்களின் தரம் மறு ஆய்வு செய்யப்படும். அதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதற்கு பொலிஸ் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியிற் பிரிவு, மற்றும் கடற்படையினரால் தலைமை தாங்கப்படும்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...