Samal Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

ஆட்சி மாறினாலும் அந்த கொள்கை மாறக்கூடாது- சமல்

Share

நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று ஆளும் மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மூத்த அமைச்சரான சமல் ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

” நாம் கூட்டணி அரசு. பல கட்சிகள் உள்ளன. அவற்றின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். அதேபோல எதிரணியினரின் யோசனைகளையும் ஏற்க வேண்டும்.

தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் உறுதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஆட்சி மாறினாலும் அந்த கொள்கை மாறக்கூடாது.

எனவே, மக்களை தூண்டாமல், அரசியலுக்கு அப்பால் நாட்டை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.”- என்றார் சமல் ராஜபக்ச.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...