Mexico 2
செய்திகள்உலகம்

பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள்!

Share

மெக்ஸிக்கோவில் பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள் அந்நாட்டு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

600 பேரும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய 455 ஆண்களும் 145 பெண்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் குவாட்டமாலாவை சேர்ந்த 401 பேரும், பங்களாதேஷை சேர்ந்த 27 பேரு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஹொண்டுராஸ், டொமினிக்கன், நிக்கரகுவா, எல்-சல்வடோர், கியூபா மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நாடுகளில் உள்ளவர்கள் மெக்ஸிக்கோ வழியாக மத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மெக்ஸிக்கோ அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...