world 7
அரசியல்இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி இளைஞர் விவகாரம்: பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட முக்கிய தகவல்

Share

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் நாட்டில் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப்பாட்டை விளக்கிய அமைச்சர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஊக்குவிக்கும் அல்லது அதற்குப் புத்துயிர் அளிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை இங்குள்ள மக்களுக்கு முழுமையாகக் காணப்படுகிறது என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் குறித்தும் அமைச்சர் சபையில் பிரஸ்தாபித்தார். இவ்விடயம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞன் விவகாரத்தில் சட்ட ரீதியாக எடுக்கக்கூடிய ஒரு சாதகமான தீர்மானம் எட்டப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...