car 2
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளால் இங்கிலாந்தில் கார் குண்டுத்தாக்குதல்!

Share

இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர்.

கார் நின்ற சில விநாடி அதில் இருந்து குண்டு வெடித்தது.

இதில் கார் முழுமையாகச் சிதறியது.

காரில் இருந்த பயணி அந்த இடத்திலேயேசாவடைந்தார் .

காரின் சாரதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

அவர் மோசமான நிலையில் இருந்து தப்பித்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு பொலிஸாரும்,இராணுவமும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் வைத்தியசாலையிலிருந்து இருந்து 1 கி.மீட்டர் தூரம் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கிருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

கார் குண்டு தாக்குதலில் சாவடைந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் சோதனைகள் இடம்பெற்று வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...