1746078431 Bus fare 6
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

Share

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலால், ஒரு லீற்றர் டீசலுக்கு 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிகிறது. தேசிய கொள்கையின்படி இது 2.5 முதல் 3 கி.மீ ஆக இருக்க வேண்டும்.

நெரிசலால் எரிபொருள் விரயமாவதுடன், பேருந்துகளை இயக்குவதில் பாரிய நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்களாகியும் பொதுப் போக்குவரத்துத் துறையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும், அதிகாரிகளிடையே ஊழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை 5 முதல் 6 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 14,000 தனியார் பேருந்துகள் சேவையில் உள்ள நிலையில், கொழும்பு பகுதிகளில் சேவையைத் தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...