Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

Share

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவைக்குள் உடனடியாக உள்வாங்குமாறு வலியுறுத்தி இந்த உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அன்றே ‘சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக’ மாற்றப்பட்டது.

இன்று இந்தப் போராட்டம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் இதுவரை மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உத்தியோகத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

எஞ்சியிருந்த இருவரில் ஒருவரின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஒரு உத்தியோகத்தர் மாத்திரம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கம் இது குறித்து இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...