thumb large Namal Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான பண மோசடி வழக்கு: விசாரணை ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை மாதம் நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கிற்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் (Legal Advice) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனச் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

சிஐடியினரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அடுத்த தவணைக்குள் சட்ட ஆலோசனையின் தற்போதைய நிலை குறித்துத் தெளிவான அறிக்கையை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய பண மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய வழக்காகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...