hemasiri pujitha 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

Share

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையைப் புறக்கணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரிப்பதற்கான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்னும் பெயரிடப்படாத காரணத்தினால், வழக்கை எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று (26) உத்தரவிட்டார்.

முன்னதாக, இவ்வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களைக் கோராமலேயே விடுதலை செய்ய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பிற்கு எதிராகச் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:

பிரதிவாதிகளை விடுதலை செய்த மேல் நீதிமன்றத் தீர்ப்பை இரத்துச் செய்தது.

பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முறையாக அழைத்த பின்னர், புதிய தீர்ப்பொன்றை வழங்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...