செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

Share

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய அனைத்துப் பங்காளிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் போது ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவர்களால் முன்வைக்கப்பட்ட நலன்புரி விவகாரங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, சாத்தியமான அனைத்து விடயங்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துறையின் அபிவிருத்தி என்பது நாட்டின் தேசிய முன்னுரிமை மிக்க விடயமாகும்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு இந்த மறுசீரமைப்பு இன்றியமையாதது என்பதால், இதற்கு ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என மின்சார சபை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...