23 6496dd9c83a26
செய்திகள்இலங்கை

பணவீக்க இலக்கை எட்டத் தவறிய மத்திய வங்கி: நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானம்!

Share

பணவீக்க இலக்குகளை எட்டத் தவறியமை குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளைத் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எட்டத் தவறினால், அது குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் 5% ஆக இருக்க வேண்டிய பணவீக்கம், முறையே -1.1% மற்றும் 0.8% ஆகக் குறைவடைந்துள்ளது.

அத்துடன் அது தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளுக்கான பணவீக்க இலக்குக்கு 2% இற்கு கீழ் நிலவுகின்றது.
எனவே இது தொடர்பில் மத்திய வங்கி தயாரித்துள்ள அறிக்கையைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நிதியமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...