24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

Share

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு மற்றும் புதிய கொடுப்பனவு முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ. 1,550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் சமூகமளிக்கும் நாட்களுக்காக நாளொன்றுக்கு ரூ. 200 மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு ரூ. 1,750 வரை வருமானம் பெற முடியும்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்த 2026 பட்ஜெட்டில் ரூ. 5,000 மில்லியன் (500 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1-ஆம் திகதி முதல் அமலாகும் வகையில், முதல் 06 மாதங்களுக்கு அந்தந்தப் பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாகவே இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

அதன் பின்னர், உரிய தரப்பினருடன் ஆலோசித்து, இடைத்தரகர்கள் இன்றி இந்த ஊக்குவிப்புத் தொகையை நேரடியாகத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் (Bank Accounts) வரவு வைக்கப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பெருந்தோட்டத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த சம்பளப் போராட்டங்களுக்கு இது ஒரு நிலையான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...