drowning
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாாரில் தைப்பொங்கல் சோகம்: கடலில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு – ஒருவர் காணாமல் மாயம்!

Share

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பின்னர், இன்று (15) பிற்பகல் நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசாலை கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் நால்வரும் சிக்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில், கடற்படையினரும் காவல்துறையினரும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நால்வரில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தைப்பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில் கடற்கரைகளுக்குச் செல்வோர் கடலின் சீற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

 

 

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...