sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

Share

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களுக்கு (Cyber Attacks) எதிராகத் தேரர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செவ்வாய்க்கிழமை (13) முறைப்பாடு செய்துள்ளது.

முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய தேரர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து, பௌத்த மதகுருமார்களைக் குறிவைத்துத் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் அரசியல்வாதி ஒருவரால் மிஹிந்தலை தேரரைப் பற்றிப் பயன்படுத்தப்பட்ட ‘வனச்சாரி’ போன்ற வார்த்தைகள், ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் அவமதிக்கும் செயல் என அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பல்வேறு யூடியூப் (YouTube) அலைவரிசைகளைப் பயன்படுத்தி மதகுருமார்களைப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.

பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் தேரர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து CID பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்து நாட்டின் மகாநாயக்க தேரர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டின் ஆட்சியாளர் மக்கள் மற்றும் மதத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, இவ்வாறான அவமதிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.

இக்கட்டான சூழல்களில் தேரர்கள் மௌனம் காக்கப் போவதில்லை என்றும், மதகுருமார்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது எச்சரித்தனர்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...