images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய “சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளி” எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா அரச இயந்திரத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக இயங்கியவர் என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகள், கடத்தல்கள், காணாமலாக்கல்கள் மற்றும் வன்புணர்வுகளுக்கு அவரே முதன்மையான பொறுப்பாளி என்றும் சுகாஸ் சாடியுள்ளார்.

“இவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர். இந்தியாவின் சூளைமேடு கொலை வழக்கில் இவருக்கு எதிரான பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

டக்ளஸின் கைது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது. அவர் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தற்போதைய NPP/JVP அரசாங்கம், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களைக் கைது செய்ததைப் போலவே, இந்தக் கைதையும் ஒரு அரசியல் தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். கைதானவர்கள் சில வாரங்களில் வெளியே வருவார்களேயானால், அது அந்தந்தக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கருதப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...