External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

Share

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை வெளிவராத பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த வேளையில், ஒரு முக்கிய முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது.

அனைத்து அதிகாரிகளும் வெளியேற்றப்பட்ட பின், ஜனாதிபதியும் ஜெய்சங்கரும் சுமார் அரை மணி நேரம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியை இதன்போது ஜெய்சங்கர் கையளித்தார். இலங்கையின் பொருளாதார நலனுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எதிர்பாராத நிவாரணப் பொதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்திய அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து, சீன உயர்மட்டத் தூதுவர் வாங் ஜுன்ஷெங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

அண்மைய சூறாவளிப் பேரழிவிலிருந்து மீள சீனா ஒரு பெரிய திட்டத்தின் கீழ் உதவத் தயாராக இருப்பதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரை ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் நேரில் சென்று வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் சீனா முன்னெடுக்கவுள்ள பாரிய செயற்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் கருதி, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகளையும் முதலீடுகளையும் வழங்கி வருவது, பிராந்திய அரசியலில் இலங்கையின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...