articles2FuvBah1qXvfv4qQ7hUM7d
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்திற்கு பிரித்தானிய அரசு தடை எச்சரிக்கை: AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால் அதிரடி!

Share

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக, எலான் மஸ்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தைப் பிரித்தானியாவில் முடக்கப் போவதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் உள்ள ‘குரோக்’ எனும் AI வசதியைப் பயன்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றியமைக்கப்பட்டுப் பரப்பப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் (Princess of Wales) உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் புகைப்படங்கள் ‘டீப் பேக்’ (Deepfake) முறையில் போலியாக உருவாக்கப்பட்டு வைரலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எக்ஸ் தளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாகக் கூறி, பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெண்கள் மற்றும் சமத்துவக் குழு கடந்த 7-ஆம் திகதியே அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது.

பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அந்நாட்டின் ‘ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Online Safety Act) கீழ் எக்ஸ் நிறுவனத்தின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன் தளம் முழுமையாக முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், எலான் மஸ்க் தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...